• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் சர்வதேச மாநாடு

March 14, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயந்திர பொறியியல் துறை 13,14 மார்ச் அன்று “நிலையான சுற்றுச்சூழலுக்கான பொருட்கள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி” குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தியது.
மாநாட்டில் பிரமுகர்கள், அழைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை முழு மனதுடன் வரவேற்று கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.வி.மோகன்ராம் உரையை நிகழ்த்தினார்.

பேராசிரியர் மற்றும் இயந்திர பொறியியல் தலைவரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரருமான டாக்டர் என் சரவண குமார் மாநாட்டின் கருப்பொருளில் உரையாற்றினார் மற்றும் சுருக்கமாக மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை சுருக்கமாகக் கூறினார். பெறப்பட்ட 160 ஆவணங்களில் 110 ஆவணங்கள் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் அவர் விளக்கினார். இதைத் தொடர்ந்து பாலக்காடு திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜாகோப் சந்தபில்லை உரையாற்றினார். மாநாட்டின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், (சஸ்டைனபிலிட்டி கன்சல்டன்ட்)நிலைத்தன்மை ஆலோசகர் டாக்டர் ஸ்வாதிமூர்த்தி பின்னர் தொடக்க உரையை நிகழ்த்தி மாநாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டார்.

துணை முதல்வர் டாக்டர் ஜி.சந்திரமோகன் அவர்கள், நிர்வாகம், அனைத்து அழைப்பாளர்கள், ஒழுங்கமைக்கும் குழு, மாணவர் தொண்டர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க