• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

May 17, 2017 தண்டோரா குழு

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், யோகா உள்ளிட்ட திட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாரகும் வகையில் நூல்கள் வாங்க மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க