• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரான்சில் முதல்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த பூனைக்கு வெண்கல சிலை!

November 13, 2017 தண்டோரா குழு

முதல்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ‘ஃபெலிசெட்’ என்னும் பூனை‘வெரோனிக் ஏஜி1’ என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் உயரத்துக்கு சென்றுவிட்டு, சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு, பாராசூட் மூலம் பத்திரமாக உயிருடன் தரையிறங்கியது.

அந்த விண்வெளி பயணத்தின் மூலம் முதல்முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையையும் பெற்றது. ‘ஃபெலிசெட்’பூனைக்கு பிறகு, நாய், குரங்கு மற்றும் குரங்கு இனத்தை சேர்ந்த சிம்ப்பன்சி ஆகியவை விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

தற்போது, பிரான்ஸ் நாட்டில் ‘ஃபெலிசெட்’பூனைக்கு ஒரு வெண்கல சிலை விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக,லண்டன் நகரில் பணிபுரியும் கிரியேட்டிவ் இயக்குநர் மாத்யூ செர்ஜ் என்பவர் ‘கிக்ஸ்டார்டர்’ என்னும் இணையதளத்தை தொடங்கி, அதன் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

மேலும், ‘லைகா’ என்னும் நாய், ‘ஹாம்’ என்னும் சிம்ப்பன்சி விண்வெளிக்கு சென்று வந்ததை மக்கள் நினைவு கூறுகின்றனர். ஆனால் ‘ஃபெலிசெட்‘ என்னும் பூனையும் விண்வெளிக்கு சென்று வந்ததை மக்கள் மறந்துவிட்டனர்.இதனை சரி செய்ய ‘ஃபெலிசெட்’ க்கு ஒரு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்” என்று லண்டனில் பணிபுரியும் கிரியேட்டிவ் இயக்குநர் மாத்யூ செர்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க