• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் விழாவிற்கு லேட்டாக வந்த தமிழிசைக்கு அனுமதி மறுப்பு

February 24, 2018 தண்டோரா குழு

மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகளிருக்கான மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். இத்திட்டத்தை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட வாக்குவாதத்துக்கு பிறகு அவருடன் வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு விழாவில் பங்கேற்க தமிழிசைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் வந்தபின் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

மேலும் படிக்க