• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியை பாதுகாப்பையும் மீறி சந்தித்த நான்கு வயது சிறுமி

April 17, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் காரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, பலத்த பாதுகாப்பையும் மீறி நான்கு வயது சிறுமி சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில், கிரண் பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை திறந்து வைத்தார். மருத்துவமனைக்கு பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்த போது வழியில் திரண்டிருந்த தொண்டர்கள் மோடியை வரவேற்றனர்.

இதையடுத்து, அந்த சாலையில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது, இதற்கிடையே, பலத்த பாதுகாப்பையும் மீறி நான்கு வயது சிறுமி ஒருவர், மோடியின் காரை நோக்கி சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத பிரதமரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும், காரை நிறுத்திய மோடி, கதவை திறந்து சிறுமியிடம் சிறிது நேரம் பேசினார்.இதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். பிரதமரின் காரை, சிறுமி வழிமறித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க