• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“பிக் பாஸ்” மூலம் என்ன கற்றுக் கொள்ளலாம் – கமல் விளக்கம்

July 13, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் அண்மையில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்நிகழ்ச்சி குறித்து கடந்த சிலநாட்களாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கிடையே, கமல் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்து தனது விளக்கத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

‘அடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு சம்பத்தை வைத்து தான் ஒரு அறிவுரையை கூற முடியும். எடுத்துக்காட்டாக பக்கத்து வீட்டில் புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா, இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது என்று நம் வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பார்கள்’ என்று கூறினார்.

மேலும், ‘கூடி வாழ்தலால் உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் ‘பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த படங்களில் பாலசந்தர் ஒருவரே திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவரவர் வசனங்களை எழுதி கொள்கிறார்கள் அதுதான் வித்தியாசம்’ என்று கமல் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் படிக்க