• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்பு படை வீரர்கள் 2௦ பலி

April 24, 2017 தண்டோரா குழு

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 2௦ பேர் பலியாகியுள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்கள் இடையே தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் சுமார் 2௦ பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணமால் போன வீரர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககியுள்ளது.

மேலும் படிக்க