• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“பவானியாற்றின் குறுக்கே தடுப்பணையை கேரளம் நிறுத்த வேண்டும்”

January 30, 2017 தண்டோரா குழு

பவானி ஆற்றின் குறிக்கே தடுப்பணை கட்டுவதைக் கேரள அரசு நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளைக் கட்ட முனைந்துள்ளது. அங்குள்ள மலைவாழ் மக்களின் குடிநீர்த் தேவைக்காக இவ்வாறு தடுப்பணைகள் கட்டப்படுகின்றன என்று கேரள அரசு கூறி வருகிறது. இருந்தாலும், பவானி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, தண்ணீரைத் தேக்குவதால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பவானி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதும், இம்மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையும் பாதிக்கப்படும்.

மேலும், காவிரி நதியின் துணை நதிகளாக உள்ள பவானி உள்பட ஆறுகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு விசாரணையை பிப்ரவரி 24ந் தேதி முதல் அன்றாடம் நடத்த உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும். அதுவே இறுதியானது எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் கூட காத்திராமல் கேரள அரசு முன்கூட்டியே தடுப்பணை கட்ட முனைந்துள்ளது. எனவே, கேரள அரசு முனைந்துள்ள தடுப்பணையைக் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க