• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயணிகள் அத்துமீறினால் ரூ.15 லட்சம் வரை அபராதம் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

April 17, 2017 தண்டோரா குழு

விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் சிவசேனா எம்பி ஒருவர் விமானப் பணியாளர் ஒருவரை காலணியால் தாக்கிய சம்பவங்கள் உட்பட பயணிகள் அத்துமீறல் தொடர்பான புகார்கள் காரணமாக வரும் ஏர் இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பயணிகளின் தகராறு செய்வதால் விமானம் காலதாமதமானால் சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஏர் இந்தியா, ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால்
ரூ. 5 லட்சமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதமானால் ரூ. 10 லட்சமும் 2 மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆனால் 15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க