• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு

April 24, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு திங்கட்கிழமை முதல், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.மத்திய உளவு பிரிவு போலீசார், பன்னீர் செல்வம் செல்லும் இடங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் முதல்-அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.துப்பாக்கி ஏந்திய 8துணை ராணுவப் படையினர் பன்னீர் செல்வத்துக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க