• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தார் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

February 11, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுகலிருந்து முக்கிய நிர்வாகிகள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பல அதிமுக மூத்த தலைவர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து ஜெயலலிதா மறைவிலிருந்து, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான பொன்னையன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பொன்னையனின் இந்த ஆதரவு,சசிகலா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

மேலும் படிக்க