January 31, 2020
பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22-09-2017ல் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கழிவறை அருகே ஆனந்தகுமார், செல்வராஜா ஆகிய இருவரை மதிய நேரத்தில் பட்டப்பகலில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சி.சூர்யா , ஆர்.சூர்யா,
மோகன்ராஜ் , விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளான 5 பேரின் நண்பரான வினோத்குமார் என்பவரை 02-06-2017 கொலை செய்ததால், பழிக்கு பழி என்ற விதத்தில் இருவரை இந்த 5 பேர் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.