• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் – தமிழிசை

February 8, 2019 தண்டோரா குழு

தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

தமிழக அரசின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது.

தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழக பட்ஜெட் விவசாயத்தையும், விவசாயிகளையும் கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவித்தொகை, அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, கஜா புயலால் பாதித்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

ஸ்டாலின் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளதை பார்ப்பதே இல்லை. முன்னரே முடிவு செய்துவைத்துக் கொண்டு குறைகூறுகிறார். தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்” என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க