• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்று ஆதரவு இன்று சோதனை

April 7, 2017 தண்டோரா குழு

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்த சரத்குமாரை அதிமுக அம்மா அணிக்கு அழைத்து வர முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அதிக பணம் கைமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் சரத்குமார் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று அதிமுக (அம்மா) அணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க