January 7, 2020
நெல்லை கண்ணன் மற்றும் கோலம் போட்டவர்கள் கைது குறித்து முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப் பற்றி வரம்பு மீறி பேசக் கூடாது. நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை.
கோலம் பாடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்சினை இல்லை. வெறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர் புகாரளித்ததால் கைது செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.