• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வைத்து கல்லூரி மாணவியை மிரட்டியவர் கைது

March 18, 2020

நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த எலக்ட்ரீசியன் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை கணபதி நல்லாம்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரசாத் இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்நிலையில் இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று பிரசாத் போட்டோ எடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பிரசாத் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு மாணவி விலகினார். மாணவிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வந்தது.

இதனை அறிந்த பிரசாத் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வில்லை எனில் நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பீளமேடு போலீசில் மாணவி புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாதத்தை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க