• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல் ஏ

February 11, 2020

கோவை ஒண்டிப்புதூரில் சாலைகளை செப்பனிட பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து நா.கார்த்திக் எம்எல்ஏ நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும், சாலை கழிவுகள் தேங்கி கிடக்கின்றது. இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் பல முறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.

இந்நிலையில், அந்த மோசமான சர்வீஸ் சாலைகளை ஆய்வு செய்த நா.கார்த்திக் எம்எல்ஏ, கோவை மத்திய சிறை முன்பு உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், கோட்ட கணக்காளர் பீரான் ஆகியோர் சமரச செய்தனர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணி மேற்கொள்வதாகவும், புதிய சாலை நிதி தாமதம் ஆனால், கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நிதி பெற்று பணியை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் படிக்க