• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு முடிவுகள் நமக்கு நல்ல பாடம் – பொன். ராதாகிருஷ்ணன்

June 24, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு முடிவுகள் நமக்கு நல்ல பாடத்தை அளித்துள்ளன என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்த இந்த தேர்வு முடிவுகளில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் "தமிழகத்தின் நீட் தேர்வு முடிவுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு நான்மா ணவர்களை குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆசிரியர்கள்தான் இதற்கு காரணம்.தமிழக பாடத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் நமக்கு நல்ல பாடத்தை அளித்துள்ளன" என்றார்.

மேலும் படிக்க