• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு கட்டாயம் நடக்கும் – ஜே.பி. நட்டா

April 15, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும் என மத்திய சுகாதார அமைச்சர் அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில்,

” தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். நீட் தேர்விலிருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு இன்று வரை ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேட்டி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க