• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு

March 16, 2020 தண்டோரா குழு

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 4 பேரும் சட்டத்தில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் இடைவிடாது பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மூன்று முறை தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வது, அது நிராகரிக்கப்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவது என ஒரு சுழற்சியான போக்கை நிர்பயா கொலை குறவாளிகள் பின்பற்றி வருகின்றனர். வரும் 20-ந் தேதி நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று நிர்பயா கொலை குற்றவாளிகள் திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகள் அக்‌ஷய், பவண் மற்றும் வினய் ஆகியோர் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 20-ந் தேதியும் இவர்களது தூக்கு தண்டனை நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் படிக்க