• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை: மத்திய அரசு

March 29, 2017 தண்டோரா குழு

நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்தார்.

அதில், நியூட்ரினோ திட்டத்தை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள அவர்நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்,தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால், திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க