• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிதிஷ் குமாருக்கு மோடி பாராட்டு

January 5, 2017 தண்டோரா குழு

பிகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்ட பிரதமர் மோடி பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் முழு மதுவிலக்கு அமலைப் பாராட்டிப் பேசினார்.

இது குறித்து மோடி பேசியதாவது:

முன்னோடியான முழு மதுவிலக்கு சமூகப் பணியை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கு எனது மனம் திறந்த வாழ்த்துகள். இது அனைத்துக் கட்சிகள் மற்றும் பிரிவினரிடையே ஒத்துழைப்புக்காக நிதீஷ் விடுத்துள்ள அழைப்பாகும்.

அரசு மட்டுமோ அல்லது நிதீஷ்குமார் மட்டுமோ இதனை வெற்றியடையச் செய்யாது, இதற்கு மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனினும் இத்தகைய மிகப்பெரிய சமூகப் பணியை மேற்கொண்டதற்காக நான் நிதீஷ்குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க