March 11, 2020
அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்த ரஜினி அவ்வப்போது அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 5 ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,து, தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் மிஞ்சியது என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நாளை காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய கூட்டத்தில் கட்சி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது. மேலும், கட்சி மாநாட்டுக்கான இடம், தேதி உள்ளிட்டவைகளும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் நாளையே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (மார்ச் 12) அவர்களை சந்தித்த பின், கட்சி அறிவிப்பு, முதல் மாநாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.