• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம் – கமல்

February 4, 2019 தண்டோரா குழு

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

மேற்குவங்காலத்தை போல் தர்ணா போராட்டம் தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். நடக்கல ஏன்னென்றால் அவ்வளவு பெரிய அழுத்தம் மேலிருந்து வந்தால் எந்த சுயமரியாதை உள்ள அரசும் ஏற்காது. அதனுடைய பிரதிபலிப்பாக இருக்கலாம். முழு அரசியல் தமிழர்களுக்கு விளக்க வேண்டியதில்லை. நம் நிலைமையை விளக்கலாம். நவீனத்தை ஏளனம் செய்யக்கூடாது. அதே சமயம் ஓட்டை உள்ள தண்ணீர் அள்ள முடியாது. பக்கெட்டில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்போம் என்பது பேராசையின் உச்சக்கட்டம். நமக்கும் வாழ்வதற்கு இடம் அளித்துள்ளது உலகம். நமக்காக தான் உலகம் என்பது தவறு. அதற்கான விளைவுகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.தமிழக அரசின் தனி குனாதீசியம். பல வருடங்களாக பார்த்து வருகிறோம். இரு நாக்கு உடையவர்கள். பிரதமர் தமிழகத்திற்கு பேரிடரின் போது வராமல் தற்போது அடிக்கடி வருவது தேர்தல் தான் காரணம் மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதைப்பற்றி விவாதிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க