• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பு காணொளியை ஸ்டாலினிடம் கொடுக்க உத்தரவு

March 10, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான காணொளியைத் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்குமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்குதல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதில் எந்த விதி மீறலும் இல்லை. ரகசிய முறையில்தான் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பேரவை விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.

“சட்டப் பேரவைச் செயலர் கொடுத்த பதில் மனு குறித்து திமுக கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், “அங்கு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சம்பந்தமான காணொளியை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க