• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகா் திலீப் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

July 18, 2017 தண்டோரா குழு

மலையாள நடிகா் திலீப்பின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் திலீப் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

இதனை தொடா்ந்து நடிகர் திலீப் சார்பில் திருவனந்தபுரம் உயா்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் சார்பில் உயா்நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த உயா்நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைத்துள்ளது.

மேலும் படிக்க