• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

January 25, 2020 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராமன் சீதை குறித்து பேசுகையில் பெரியார் குறித்தும் அவர் நடத்திய ஊர்வலம் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ரஜினிகாந்தின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உயிரோடு இருக்க மாட்டார் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ரஜினிகாந்த் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் ரெட்பிக்ஸ் இணைய தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க