• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ தோழர் ” குறித்து சைலேந்திரபாபு விளக்கம்

January 25, 2017 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் டிரண்டாகி வரும் “தோழர்” என்கிற வார்த்தை தொடர்பாக தான் எந்தவித கருத்தும் கூறவில்லை என ஏடிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் வாங்க தோழர். போங்க தோழர்.. என்றபடி தோழர் என்கிற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. ஒரு சிலர் ‘தோழர்’ என்றே தங்களது டி.பி.க்களையும் வாட்ஸ் அப்பில் மாற்றி வருகின்றனர்.இரவு வணக்கம் தோழர் காலை வணக்கம் தோழர் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தோழர் என்ற வார்த்தை.

இந்த வார்த்தை எப்படி டிரென்ட் ஆனது என தேடியபோது தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்கள், யாரேனும் தங்களுக்கு தோழர் எனக் கூறிக்கொண்டு குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பினால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் உடனடியாக அழித்து விடுங்கள் எனச் சொன்னதாக ஒரு தகவல் பரவியது.

இதனைதொடர்ந்து பலரும் தோழர் என்கிற வார்த்தையை சமூக வலைத் தளங்களில் பயன்படுத்த அவ்வார்த்தை தற்போது டிரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சைலேந்திர பாபு தனது டுவிட்டர் பக்கத்தில்


எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க