November 13, 2020
தண்டோரா குழு
தொழிற்சாலை ஆய்வாக இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 1லட்சத்து 53ஆயிரம் ரூபாய் சிக்கியது.
தொழிற்சாலை ஆய்வக இணை இயக்குனர் அலுவலகம் வட கோவை மேம்பாலம் தலைவாசல் காம்பிலக் சில் உள்ளது. இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் டிஎஸ்பி கணேசன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தொழிற்சாலை ஆய்வக அதிகாரிகள் இல்லை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சோதனை நடத்தியதில் ரூ 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
மேலும் அந்த தொழிற்சாலை இணை இயக்குநர் வேணுகோபால் அறைக்கு பணத்துடன் வந்த தரகர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் பிடிபட்டது. துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ரூ.23 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தகவலை தொடர்ந்து தொழிற்சாலை துறை அதிகாரிகள் யாரும் அலுவலத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் இணை இயக்குனர் வேணுகோபால், துணை இயக்குனர் சாந்தினி பிரியா, புரோக்கர் பனையப்பன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் புரோக்கர் பெயர் பனையப்பன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.