• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூரில் 1500 குடும்பங்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கல்

December 2, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1500 குடும்பங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா கோழிக்குஞ்சுகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேன்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுத்தி வந்து கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூர், கரடிமடை, பூலுவாம்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1500 குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கோழிகள் வீதம் 1500 குடும்பங்களுக்கு சுமார், 37 ஆயிரத்து 500 விலையில்லா கோழிகுஞ்சுகளும், பராமரிப்பு ஊக்கத்தொகையும், கட்சி பாகுபாடுகள் இன்றி அனைத்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி,

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலதிட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக 5 கல்லூரிகள், அதிகமான கல்லூரிகள், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தடையில்லா குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். தமிழகத்தை பொருத்தவரை 5 ஆண்டுகளில் 50 ஆண்டு வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது. என தெரிவித்தார்.

மேலும் படிக்க