• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

March 30, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் படி 044 – 25333093, 1800 4257012 மற்றும் 1913 என்ற எண்களை தொடர்புகொண்டு புகாரையோ அல்லது ஆலோசனையையோ தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்க விரும்பாதவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலுள்ள புகார் மையத்தில் மாலை 5 மணி முதல் 6 வரை நேரடியாக சென்று புகார் தெரிவிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் இயங்குவதாகவும்,பணப்பட்டுவாடவை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க