• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் தேதிக்காகவும் லஞ்சம் கொடுக்க முயன்றாராதினகரன் ?

May 20, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதிக்காகவும் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தில்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக தில்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி தினகரன் சுகேஷ் சந்திரசேரிடம் பேசிய ஆடியோ பதிவும் உள்ளதாக காவல்துறையினர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க