• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிய 16 லட்சம் இயந்திரங்கள் வாங்க முடிவு

April 20, 2017 தண்டோரா குழு

தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், 16 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரம் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

சமீபத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாகவும், இதனால்தான் உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் ஓட்டு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தன.எனினும், இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மாறாக முறைகேடுகளை யார்வேண்டுமானாலும் நிரூபிக்கலாம் என சவால் விடுத்துள்ளது.

மேலும், வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், அரசியல் கட்சிகளின் ஐயத்தை போக்கும் விதத்திலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தது. இந்த இயந்திரங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.

இந்நிலையில், புதிதாக 16 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிந்து கொள்ள முடியும். 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

மேலும் படிக்க