• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி – கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம்

September 22, 2022 தண்டோரா குழு

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டியில் கோவை சேர்ந்த பள்ளி மாணவன் முதல் இடம் பிடித்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மத்திய பிரதேசம்,போபால் பகுதியில் கடந்த வாரம் தேசிய அளவிலான டெக்கலத்தான் போட்டி நடைபெற்றது. தமிழகம்,கேரளா, ஹரியானா, குஜராத்,மஹாராஷ்டிரா,ஆந்திரா உள்ளிட்ட 29 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இதில் 18வயதுக்கு உட்பட்ட பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் டெக்கலத்தானில் 10போட்டிகள் உள்ளடக்கிய ஈட்டி எறிதல், ஓட்ட பந்தயம், தடகளம், குண்டு எறிதல்,போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை நேஷனல் மாடல் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் அரவிந்த் என்ற மாணவன் முதல் இடத்தை பிடித்து சான்றிதழ்கள்,தங்க பதக்கங்களை வென்றார்.

இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாணவனுக்கு 1லட்சத்திற்க்கான காசோலை மற்றும் பள்ளியில் கட்டணமில்லாமல் பயில அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க