• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசவிரோத திமுகவுக்கு சசிகலாவே பரவாயில்லை – சுப்பிரமணிய சுவாமி

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: “தேச விரோதக் கட்சியான திமுக-வை விட சசிகலாவே பரவாயில்லை” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினர் தன்னைக் கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர் என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக அவர் போர்க்கொடி எழுப்பினார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரு அணிகள் உருவானதுடன் தனித்தனியாக இயங்குகின்றன.

இந்நிலையில், சசிகலா அணி தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்ற அவர் 15 நாட்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார்.

அதையடுத்து, சனிக்கிழமை முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கை கோரும் வகையில் வாக்குகெடுப்பு நடத்துவதற்கு சிறப்புப் சட்டபேரவை கூட்டம் கூடியது. ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டு சட்டப் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அவரது இருக்கை மற்றும் மைக்கை உடைத்தனர்.

இதனால் சட்டப்பேரவையைப் பேரவைத் தலைவர் ஒத்தி வைத்தார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் “டுவிட்டர்” பக்கத்தில், “திமுக மிகவும் வன்முறை மற்றும் தேசவிரோதக் கட்சி. அதைப்பார்க்கும் போது திமுகவை விட சசிகாலவே பரவாயில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க