• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெர்மாகோல் திட்டம் பாராட்டுகளையே பெற்றுள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜூ

April 25, 2017 தண்டோரா குழு

தெர்மாகோல் திட்டம் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டுகளையே பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க கடந்த வாரம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மாகோல் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை மூடிய சில நிமிடங்களில் தெர்மாகோல் எல்லாம் பறந்தன. இத்திட்டத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு,

விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது அவசியமற்றது. தமிழக அரசின் மீது பழி சுமத்தவே முழு அடைப்பு நடத்தப்படுகிறது என்றார்.

மேலும் வைகை அணை தெர்மாகோல் திட்டம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது என்றும் அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க