• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் ஒட்டகங்களுக்கு என்று தனி மருத்துவமனை தொடக்கம்

December 15, 2017 தண்டோரா குழு

துபாயில் ஓட்டங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை தொடங்கப் பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான துபாயில் உள்ள மர்மௌம் என்னும் இடத்தில், சுமார் 10.9 மில்லியன் டாலர் செலவில் ஒட்டகங்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை, எம்ஆர்ஐ ஸ்கேன் அறை, கேட் ஸ்கேன் அறை ஆகியவை நவீன முறை மூலம் ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை தவிர, சுமார் 2௦ ஒட்டகங்களுக்கு சிகிச்சை தரகூடிய சர்வதேச கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு அறுவை சிகிச்சைக்கு 1,௦௦௦ டாலர், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் செய்ய 11௦ டாலர்களில் இருந்து தொடங்குகிறது.

இது குறித்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் கூறும்போது,

“நாம் ஒட்டகங்களை வளர்க்கவோ அல்லது அதன் இனத்தை பெருக்கவோ மட்டும், அதை கவனித்து கொள்ளகூடாது. அதற்கு தேவையான மருத்துவ பராமரிப்பு அளித்து, அதை கவனித்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க