July 11, 2017
தண்டோரா குழு
கேரள மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை முற்றிலும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கிய சம்பவம் கேரள நடிகை கடத்தல் விவகாரம்.
இவரின் கடத்தலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வந்தனர். பலகட்ட விசாரணைக்கு பின் இறுதியில் இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் அண்மையில் ஓர் பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறும்போது,
“இந்த சம்பவம் குறித்த உண்மையை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். என்னுடைய உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை, கேரள போலீசாருக்கு எனது நன்றி” என்று கூறியுள்ளார்.