• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரூப்பூர் முதலிபாளையத்தில் கடையடைப்பு

April 27, 2017 தண்டோரா குழு

திருப்பூர் அருகே மதுப்பானக்கடையை அடித்து நொறுக்கிய 200 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து இன்று அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் நேற்று மதுப்பானக் கடையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது அக்கடையின் பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 500 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அதில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், 2௦௦ பேர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் முதலிபாளையம் பகுதியில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க