• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

March 23, 2020 தண்டோரா குழு

லண்டன் நாட்டில் இருந்து வந்த திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

48 வயதான திருப்பூர் தொழில் அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது.சமீபத்தில் அவர் லண்டன் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது. தற்போது அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கபட்டு உள்ளார்.

மேலும் அவரது மனைவி மற்றும் அவருடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைபடுத்தபட்டு கண்காணிப்பில் உள்ளனர். சுகாதார துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.மேலும் கோவை ஸ்பெயினில் இருந்து வந்த மாணவியும் மற்றும் லண்டனிலிருந்து திரும்பிய திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்த நிலையில் கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க