March 20, 2020
144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வதந்திகளை பரப்ப வேண்டாம் என முகநூல் மூலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக திருப்பூரில் நாளை முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது பொதுமக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக குழப்ப சூழ்நிலையும் திருப்பூரில் நிலவியது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் திருப்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கபடவில்லை எனவும், இதுபோன்ற தேவையற்ற வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.