• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருடப்படும் கைபேசிகளை முடக்க புதிய செயலி

July 11, 2017 தண்டோரா குழு

திருடப்படும் கைபேசிகளை யாரும் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க சி.ஐ.இ.ஆர். செயலியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களிடமிருந்து திருடப்படும் கைபேசிகளை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மத்திய அரசு ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு சி.ஐ.இ.ஆர். (Central Equipment Identity Register -CIER) என்று பெயர்.

திருடப்பட்ட கைபேசி அல்லது காணாமல் போன கைபேசியின் சிம் கார்டை மாற்றினாலோ அல்லது IMEI எண்ணை மாற்றினாலோ, இந்த செயலி, அந்த கைபேசியின் அனைத்து சேவைகளையும் முடக்கிவிடும்.

இந்த செயலி தற்போது சோதனையில் உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் அனைத்து கைபேசியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கைபேசியிலும் IMEI என்னும் தனித்துவமான எண் உள்ளது கைபேசியில் அந்த என்னை மாற்றவோ அல்லது திருத்தவோ முயன்றால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொலைதொடர்பு துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருடப்பட்ட கைப்பேசியை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க CIER உருவாக்கும். நுகர்வோர் ஆர்வம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உதவும் விதமாக இந்த திட்டம் உள்ளது என்று பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க