• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை-சசிகலா

January 4, 2017 தண்டோரா குழு

திமுக ஆட்சியின் போது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் வி.கே சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வி.கே. சசிகலா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடையின்றி நடத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளை மறைத்துவிட்டு, அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது . ஜல்லிக்கட்டு தடை வந்ததற்கான காரணங்களை யார் இணையதளத்தில் தேடினாலும் பக்கம், பக்கமாக உண்மை தகவல் கிடைக்கும்.

திமுக காங்கிரஸ் கூட்டணியின் இந்த நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை வந்தது என்ற உண்மையைக் குழித் தோண்டி புதைத்துவிட்டு, மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல.

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மையை மூடி மறைக்கும் முயற்சிலும் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க