• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் நீடிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் – செங்கோட்டையன்

June 3, 2017 தண்டோரா குழு

அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஏப்ரல் மாதம் 25–ம் தேதி தில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு தில்லி திகார் சிறையில் இருந்து தினகரன் விடுதலை செய்யப்பட்டார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்,

“சென்னை சென்று கட்சி பணிகளை தொடர்வேன். நான் கட்சியில் துணை பொதுச் செயலாளராக நீடிப்பேன். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து திருத்தணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்

“அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார்” என்றார்.

மேலும் படிக்க