• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திண்டுக்கல் மாவட்ட  ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு

March 23, 2018 தண்டோரா குழு

ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்புராஜ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் , ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்வதாக  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்தார். மேலும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த் மாவட்ட செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாக கவனிப்பார்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். தம்புராஜை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்மாவட்ட நிர்வாகிகள்146 பேர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார். 146 பேரும் ராஜினாமா கடிதத்தை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க போவதாக கூறியுள்ளனர்.

 

 

 

 

மேலும் படிக்க