• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை – தினகரன்

November 9, 2017 தண்டோரா குழு

திகார் வரை சென்றவன் யாருக்கும் பயமில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடித்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது.பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. என் பேட்டியை ஏன்? ஜெயா டிவியில் போடக்கூடாது? தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அரசு எங்களை மிரட்டி பார்க்கிறது. என் மாநில செயலாளர் வீட்டில் ரெய்டு. யாருக்கும் பயமில்லை.மன்னார்குடியில் யாரும் இல்லாத வீட்டில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது.ஜெயா டிவியில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை.33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம். 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க