• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

February 13, 2017 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடன் தமிழக அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்திருப்பதை முன்னிட்டு அங்கு காவல் துறையினரால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன.

முன்னதாக அவர், “நான் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணியில் ஈடுபடுவேன்” என்று கூறியிருந்தார். தொண்டர்களின் அணிவகுப்போடு தலைமைச் செயலகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வந்திருந்தார். ஆனால், அவர் முதலமைச்சர் வருகைக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

மேலும் படிக்க