• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மண்டல அளவிலான தடகளப் போட்டி – அசத்திய கோத்தகிரி புனித ஜூட் பப்ளிக் பள்ளி

August 8, 2022 தண்டோரா குழு

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில், தமிழ்நாடு மண்டல அளவிலான தடகளப் போட்டியை, கடந்த 1 மற்றும் 2 தேதிகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது.சென்னை சிஷ்யா இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

தமிழ்நாடு மண்டலத்தில் இருந்து 43 பள்ளிகளைச் சேர்ந்த 930 மாணவர்கள் பங்கேற்றனர்.ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், கோல்கீப்பராக ஓய்வு பெற்றவருமான முனீர் சேட், இப்போட்டிகளை துவக்கி வைத்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற ஒத்துழைத்தனர்.59 தங்கம், 37 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோத்தகிரி புனித ஜூட் பப்ளிக் பள்ளி பெற்றுள்ளது.

சப்-ஜூனியர்,ஜூனியர், சீனியர் ஆகிய நிலைகளில் மாணவர்களும், மாணவிகளும் வென்றது அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.சப்-ஜூனியர் பிரிவில் மாணவர் எஸ்.சர்வேஸ், ஜூனியர் பிரிவில் மாணவர்கள் ஆர்.பிரஜித், எஸ்.சவான், ரெஜினால்ட், சீனியர் பிரிவில் மாணவர்கள் ரோஹித், விஷ்ணுபிரியன், சீனியர் மாணவி எம்.கரீஷ்மா ஆகியோர் தனி சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றனர்.அசைக்க முடியாத ஜூடியன்ஸ் 119 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.புனேவில் வரும் நவம்பர் 3-ம் தேதி துவங்கும் தேசிய தடகளப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 63 பேரில் 38 தட கள வீரர்களுக்கு இத்தருணம் பெருமைப்படக்கூடியதாக அமைந்தது.

மாணவர்களின் அளப்பரிய முயற்சி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது. பள்ளி முதல்வர் டாக்டர் பி.பி.தனராஜன், முதல்வர் டாக்டர் சரோ தனராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க