• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக விவசாயிகள் சேலை கட்டி போராட்டம்

April 14, 2017 தண்டோரா குழு

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலையை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்கடன் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் 32 வது நாட்களாக பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன், ஒருபகுதியாக விவசாயிகள் இன்று சேலையை அணிந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது, பிரதமர் மோடி விவசாயிகளை பார்ப்பது இல்லை ஆனால் சேலை கட்டி வரும் பெண்களை மட்டுமே பார்த்து அவர்களின் குறைகளை கேட்கின்றார் என விவசாயிகள் குற்றச்சாற்றினர்.

மேலும், விவசாயிகள் சேலை கட்டிக்கொண்டால் வந்து பார்ப்பார் என கூறி சேலை கட்டி போராட்டம் நடத்தி வருவதாக அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க