• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்

April 8, 2017 தண்டோரா குழு

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக தேர்தல் கமிஷனராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாலிக் பெரோஸ்கானை தமிழக அரசு நியமித்துள்ளது.அவர் சனிக்கிழமை காலை மாநில தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பதவி ஏற்றார்.

மாலிக் பெரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தவர். அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.மேலும் வருகிற மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க